Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என் மகள் நடிகையாக வேண்டாம்: சூப்பர் ஸ்டார் மகள் ஓபன் டாக்
மும்பை: தனது மகள் நவ்யா நடிகையாவதை விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதாவின் மகள் நவ்யா நவேலி நந்தா ஏற்கனவே பிரபலம். லண்டனில் படிக்கும் நவ்யா விதவிதமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
நவ்யா நடிகையாகக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஸ்வேதா மும்பையில் நடந்த ஐஸ்வர்யா தனுஷின் புத்தக வெளியீட்டு விழாவில் கூறுகையில்,
நவ்யா
என் மகள் நடிகையாக வேண்டும் என்று கூறினால் நான் கவலைப்படுவேன். ஏனென்றால் நடிகையாக இருப்பது அவ்வளவு எளிது இல்லை. கடினமாக உழைக்க வேண்டும். அதிலும் பெண்ணாக இருந்தால் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
தோல்விகள்
திரையுலகில் நிறைய தோல்விகள் உள்ளது. அது யார் கண்ணுக்கும் தெரிவது இல்லை. படத்திற்காக நடிப்பதை மக்கள் பொது இடத்தில் விமர்சிப்பார்கள்.
ஜெயா பச்சன்
நடிகையாக என் அம்மா ஜெயா போன்று முறையாக தயாராக வேண்டும். என் தந்தை போன்று தடுமாறக் கூடாது. என் அம்மா தான் அவர்கள் வீட்டில் மூத்த பெண். படித்து முடித்த பிறகு நடிகையாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவரின் தந்தையிடம் தெரிவித்தார்.
நடிப்பு
என் அம்மா நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பில் கற்றுத் தேர்ந்தார். இது தான் நடிகையாக முறையாக செய்ய வேண்டியது. நடிக்க வந்தவுடனே புகழும், பணமும் வந்துவிடாது.