Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாய்கள் ஜாக்கிரதை... நாயா வேலை செய்த ஈத்தோ... பேயா வேலை பார்த்த சிபி!
சென்னை: தன்னுடைய நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிபி பேயாக வேலை செய்திருப்பதாக காமெடியாகத் தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
கடந்த சில வருடங்களாக பல நூறுக் கதைகளைக் கேட்டு சிபிராஜும், அவரது தந்தையுமான நடிகர் சத்யராஜ் தேர்வு செய்த படம் தான் ‘நாய்கள் ஜாக்கிரதை'. இப்படத்தில் போலீசாக நடித்துள்ளார் சிபி. அவருடன் நாய் ஒன்றும் சேர்ந்து கொலை ஒன்றை துப்பறிவது தான் இப்படத்தின் கதை.
சத்யராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்தை காஸ்மோ வில்லேஜை புரொடக்ஷன்ஸ் சிவா வெளியிடுகிறார்.
போஸ்டர் மற்றும் டிரைலர் மூலமாகவே படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், இன்று இப்படம் ரிலீசாகியுள்ளது.
இந்நிலையில், இப்படம் தொடர்பாக சத்யராஜ் கூறியதாவது :-
டெய்லி ஒரு கதை...
நான் டெய்லி வீட்டுக்கு போறப்போ சிபி யாரோ ஒருத்தர்கிட்ட கதை கேட்டுகிட்டே இருப்பாப்ல. நான் கேட்பேன், என்னடா டெய்லி கதை கேட்டுகிட்டு இருக்கே, ஆனா படமே நடிக்க மாட்டேன்னு. அது புடிக்கலை இது புடிக்கலைன்னு ஏதாவது சொல்வான்.
என் அனுபவம்...
நான் என் அனுபவத்தை வச்சு சொல்வேன். நாங்க அந்த காலத்துல, அந்த காலத்துலன்னு சொல்லக் கூடாது இருந்தாலும் சொல்றேன். ரஜினி சார் நடிக்க வந்த வருஷத்திலேயே நிறைய படம் பண்ணினார். அதே மாதிரி விஜயகாந்த், கமல், பிரபு, நான் எல்லோருமே வருஷத்துக்கு பதினைஞ்சு இருபது படம்னு நடிச்சிருக்கோம். அப்புறம்தான் குறைச்சிகிட்டோம். வர்ற படத்தையெல்லாம் ஒத்துகிட்டு அடிச்சு தள்ளுனோம்னா பதினைஞ்சு படத்துல ரெண்டோ மூணோ ஓடிட்டுப் போகுது, அதுபோதும்னு சொல்வேன்.
சிபியின் பதில்...
சிபி சொன்னாப்ல... அதெல்லாம் உங்க காலம். இப்ப அப்படி கிடையாது. ஒரு படம் போச்சுன்னாலே ஆட்டம் குளோஸ். ஓகோ... இவங்க சினிமாவை இந்த மாதிரி ஸ்டடி பண்ணி வச்சிருக்காங்க போலன்னு விட்டுட்டேன். ஒருவகையில் அது உண்மையும்கூட.
காலத்துக்கு ஏற்ற மாறுதல்...
பாசமலர் காலத்துல நைன்டி பர்சன்ட் கதை பத்து பர்சன்ட் டெக்னிக். நாங்க ஹீரோவா நடிச்ச காலத்துல அம்பது பர்சன்ட் கதை, அம்பது பர்சன்ட் டெக்னிக். இன்னைக்கு இருபத்தைஞ்சு பர்சன்ட் கதை எழுபத்தைஞ்சு பர்சன்ட் டெக்னிக் வேல்யூ. கதையை எப்படி சொல்றாங்கங்கிறது முக்கியமான விஷயம்.
உதாரணம்...
மிகப்பெரிய உதாரணம் ராஜா ராணி. அட்லி எங்கிட்ட வந்து கதை சொல்றப்ப, ஒண்ணும் பெரிய விஷயமா படலையேன்னு நினைச்சுகிட்டு நடிச்சேன். பட், மேக்கிங்ல அதை அசித்தியிருப்பாங்க. படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஃபிலிம்பேர்ல எனக்கு பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் அவார்ட் வேற கிடைச்சது.
இயக்குநர் சக்தி சரவணன் பற்றி...
சக்தியோட முதல் படம் நாணயம். அந்த கதையை சக்தி என்கிட்ட சொன்னார். ஒரு பேங்க் கொள்ளை. சரி ஏதோ இங்கிலீஷ் படத்தைப் பார்த்து சொல்றார் போல இருக்குன்னு நினைச்சேன். பேங்க் கொள்ளையை எல்லாம் எங்கய்யா எடுக்கப் போறாங்கன்னு பார்த்தா நாணயத்தை அவ்வளவு ஸ்டைலிஷா எடுத்திட்டார்.
நம்பிக்கை...
சோ, கதை இல்லை, அதை எப்படி பிரமாதமா எடுக்கப் போறாங்கங்கிறதுதான் முக்கியம். இந்த கதையை (நாய்கள் ஜாக்கிரதை) சக்தி பிரமாதமா எடுப்பார்ங்கிற நம்பிக்கை இருந்திச்சி.
ரிலீஸ் தான் பிரச்சனை...
பணப்பிரச்சனையில்லை. நாமதான் ஊர் ஊரா தெருத்தெருவா நடிச்சிட்டிருக்கோமே. பணம் பிரச்சனையில்லை. ரிலீஸ் செய்றதுதான் பிரச்சனை.
சின்ன பட்ஜெட் படங்கள்...
முன்னாடி ரஜினி, கமல், நான், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் யார் நடிச்ச படமா இருந்தாலும் ஒரு தியேடர்லதான் ரிலீசாகும். கோயம்புத்தூர்னா ஒரு தியேட்டர், ஈரோடுன்னா ஒரு தியேட்டார். ஆனா இன்னைக்கு பெரிய பட்ஜெட் படம் இருக்கிற எல்லா தியேட்டர்லயும் ரிலீஸ் ஆகுது. அப்போ சின்ன பட்ஜெட் படங்களை எப்படி வெளியிடுறது?
டபுள் பாஸிடிவ்...
டபுள் பாஸிடிவ் பார்த்தப்போ, எனக்கு உண்மையிலேயே நூறாவது நாள் டபுள் பாஸிடிவ் பார்த்தப்போ ஏற்பட்ட ஃபீலிங்ஸ்தான். நூறாவது நாள் பிரமாதமா வந்திருந்தது. பட், அதை இன்னும் பிரமாதப்படுத்தியது இசைஞானி இளையராஜாவோட பேக்ரவுண்ட் ஸ்கோர். அதே மாதிரி இதில் தரண். படத்தை எங்கேயோ கொண்டு போயிட்டார்.
மனைவியின் உழைப்பு...
என்னுடைய மனைவி இந்தப் படத்துல ரொம்ப உழைப்பு. எனக்கு சிரிப்பு வர்ற அளவுக்கு கடுமையான உழைப்பு. ரொம்ப ஓவர் பாசம் பையன் மேல.
நாயா... பேயா.... வேலை
இந்தப் படத்துல நாயா வேலை செய்தது ஈத்தோ (படத்தில் நடித்திருக்கும் நாயின் பெயர்) பேயா வேலை செய்தது சிபி நாயா பேயா வேலை செய்தது என்னுடைய மனைவி' என இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.