Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நள்ளிரவில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா கலாட்டா... நடந்தது என்ன?
கோலிவுட்டில் பிரபலங்களின் இரவு பார்ட்டிகள் என்றாலே அது ஏதாவது கலாட்டாவில் முடிந்து மறுநாள் கிசுகிசு அல்லது பரபர செய்தியாகிவிடுவது வழக்கம். குறிப்பாக சிம்பு, தனுஷ், வெங்கட் பிரபு கேங், விஜய் சேதுபதி பார்ட்டிகள் அப்படித்தான் முடியும்.
கொஞ்ச நாட்களாக இந்த ராக்கூத்துகள் பற்றி செய்தி இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளதை பாடகி சுசித்ராவின் ட்வீட்டுகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக அவர் சொல்லவில்லை.
நள்ளிரவு 1 மணிக்கு தனுஷ், சிம்பு, சுசித்ரா போன்றவர்கள் ஏதோ விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனுஷும் அவர் கேங்கும் சுசித்ராவின் கையைரத்தம்கட்டிப் போகும் அளவுக்கு முரட்டுத்தனமாக இழுத்துள்ளார்கள். அதை தனுஷ் தடுக்கவே இல்லையாம். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். சிம்புவும் இதற்கு சாட்சியாம். தான் தாக்கப்பட்டபோது யாரும் உதவி செய்ய வேண்டாம் என தனுஷ் கூறிவிட்டாராம்.
இதையெல்லாம் ட்விட்டரில் புலம்பியுள்ள சுசித்ரா, ரத்தம் கட்டிப் போயுள்ள தன் கையை படமெடுத்து வெளியிட்டுள்ளார்.
நள்ளிரவு ஒரு மணிக்கு, பார்கள் கூட இருக்காது. அந்த நேரத்தில் இவர்கள் மூவரும் என்ன செய்தார்கள்? எதற்காக மோதல் நடந்து, அடிதடி வரை போனது? காவல் துறை விசாரிக்கலாமே!