Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விக்ரம் பாணியில் உடலை ஏற்றி இறக்கும் சிம்பு
சென்னை: சிம்பு தன்னுடைய அடுத்த படத்தில் 90 கிலோ வரை உடல் எடையை அதிகரித்து நடிக்கப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் உடல் எடையை ஏற்றி, இறக்கும் நடிகர்களில் விக்ரம், சூர்யா, விஷால் போன்றவர்களுக்கு முக்கிய இடமுண்டு.
அதிலும் ஐ படத்தில் விக்ரம் உடல் எடையை சர்வசாதாரணமாக ஏற்றி இறக்கியதைப் பார்த்து, வியப்படையாதவர்களே இல்லை எனலாம்.
இந்நிலையில் நடிகர் சிம்புவும் தற்போது இந்தப் பட்டியலில் இணையப் போகிறார் என, கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் விஜய் சந்தரின் அடுத்த படங்களில் சிம்பு நடிக்கவிருக்கிறார்.
இதில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் முதன்முறையாக சிம்பு 3 விதமான கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார்.
இதில் ஒரு கெட்டப்பிற்காக தன்னுடைய உடல் எடையை 20 கிலோ அதிகரித்து, 90 கிலோ குண்டுப்பையனாக சிம்பு நடிக்கவிருக்கிறார்.மற்ற இரண்டு கெட்டப்புகளிலும் 60, 70 கிலோ எடை கொண்டவராக மாறி நடிக்கவிருக்கிறார்.
இதற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரிக்கும் முயற்சிகளில் சிம்பு தற்போது இறங்கியிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன்- சிம்பு முதன்முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.