Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சங்கம் இப்படி பிளவுபட்டுப் போச்சே... ! - சிம்புவின் கவலை
ஒரே குடும்பமா இருக்க வேண்டிய நடிகர் சங்கம் இப்படி பிளவுபட்டு நிற்பது வேதனையாக உள்ளது என்று நடிகர் சிம்பு கூறினார்.
வருகிற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர் சிம்பு, உப தலைவர் பதவிக்கு சிம்பு போட்டியிடுகிறார். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் இரண்டு அணிகளாக போட்டியிடுவது குறித்து சிம்பு பேசும்போது, "நான் நடிகன், டி.ராஜேந்தரின் மகன், தமிழன்... இதையெல்லாம் தாண்டி ஒரு மனிதன். எனக்குப் பிரிவினை என்பதே பிடிக்காத விஷயம்.
சினிமா என்பது ஒரே குடும்பம். நடிகர் சங்கம் என்பது நடிக்கக் கூடிய ஒட்டுமொத்த நடிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டது. நான் 14 வயதில் இருந்து நடிகர் சங்கத்தின் கமிட்டியில் இருந்து வருகிறேன்.
எல்லோரும் என்னிடம் ஏன் இளைஞர்கள் அணியில் சேரவில்லை என்று கேட்கிறார்கள். இளைஞர்கள் அணியை நடத்துகிறார்கள், முதியவர்கள் அணியை நடத்துகிறார்கள் என்பது இங்கு முக்கியமில்லை. உண்மை எங்கிருக்கிறது என்பதுதான் முக்கியம். நமக்கு பிரச்சினை என்றால் யார் வந்து முதலில் நிற்பார்கள் என்பதுதான் இங்கு முக்கியம்.
நமக்குள் பிரிவினை இருப்பது என்பது மிகப்பெரிய கவலையளிக்கிறது. எங்கேயும் தப்பு நடக்கிறது என்றால் அதுக்கு குரல் கொடுக்க முதல் ஆளாக வந்து நிற்பேன். இந்த தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள்? யார் தோற்கிறார்கள்? என்பது பற்றி கவலை இல்லை," என்றார்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!