Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சூர்யாவின் சி3 படத்திற்காக இறங்கி வேலை பார்த்த விஷால் அன்ட் கோ
சென்னை: சிங்கம் 3 வெளியான தியேட்டர்களில் யாரும் படத்தை வீடியோ எடுக்காத வகையில் கண்காணிப்பு குழுக்களை அனுப்பி வைத்தாராம் நடிகர் விஷால்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 3 படம் பல முறை தள்ளிப் போய் நேற்று ஒருவழியாக ரிலீஸானது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலால் பலர் டிவியும் கையுமாக உள்ள நேரத்தில் படம் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் படம் ரிலீஸான அன்றே அதை இணையத்தில் வெளியிடுவோம் என இணையதளம் ஒன்று சவால் விட்டது. ஆனால் அறிவித்தபடி அல்லாமல் ஒரு நாள் தாமதாக இன்று வெளியிட்டுவிட்டது.
இதற்கிடையே படத்தை யாரும் வீடியோ எடுக்காமல் இருக்க சிங்கம் 3 வெளியான தியேட்டர்கள் அனைத்திற்கும் கண்காணிப்பு குழுக்களை அனுப்பி வைத்தாராம் நடிகர் விஷால்.
திருச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிங்கம் 3 படத்தை வீடியோ எடுத்த 8 பேரை அந்த குழு கையும் களவுமாக பிடித்ததாம்.