Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'மாரி' வழியில் 'எஸ்3'!
சென்னை: ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எஸ் 3 படத்தில் பாடகரான கிரிஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.
சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் 3 படத்திற்கு எஸ் 3 என்று பெயரிட்டுள்ளனர்.
சர்வதேசப் போலீசாக சூர்யா நடிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது விசாகப்பட்டினத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதல் 2 பாகத்தில் நடித்த விவேக் மற்றும் சந்தானம் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இவர்களுக்குப் பதிலாக சூரி, சாம்ஸ், ரோபோ சங்கர் என்று 3 காமெடி நடிகர்கள் எஸ் 3யில் நடிக்கின்றனர்.
Congrats Machi for being a part of #S3 Semma get up @krishoffl all da best!!! pic.twitter.com/HGXUXQnL1H
— venkat prabhu (@vp_offl) January 9, 2016
சூர்யா சர்வதேசப் போலீசாகவும், சுருதிஹாசன் சிஐடி ஆபிசராகவும் நடிக்கும் இப்படத்தில் பாடகர் கிரிஷும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே தனுஷின் மாரி படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். படம் பெரிதாக போகாவிட்டாலும் விஜய் யேசுதாஸின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது விஜய் யேசுதாசைப் பின்பற்றி பாடகர் கிரிஷும் எஸ் 3 யில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் எஸ் 3 யின் படப்பிடிப்பை பல்வேறு ஆசியக் கண்டங்களிலும் நடத்த எஸ் 3 குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.