Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிவகார்த்திகேயன் விஷயத்தில் என்ன தான் நடந்தது?: தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம்
சென்னை: சிவகார்த்திகேயன் அழுதது குறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் சிலர் தன்னை மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். அவர் அழுதது பற்றி தான் கோடம்பாக்கத்தில் பேச்சாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் கூறுகையில்,
எஸ்கேப் மதன்
எஸ்கேப் ஆர்டிஸ்ட் பி. மதன் மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் புதிய படங்களுக்காக சிவகார்த்திகேயனுக்கு பெரிய தொகையை முன்பணமாக அளித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
சிவா
சிவகார்த்திகேயனோ தான் இரண்டு மதன்களிடமும் இருந்தும் பணம் வாங்கவே இல்லை என்று மறுத்துள்ளார். பண பரிவர்த்தனை குறித்து எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
ரெமோ
ரெமோ படத்தை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ரஜினி முருகனை வெளியிட தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன.
சம்பளம்
ரஜினி முருகன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு இதுவரை சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை. பண விவகாரம் குறித்து தயாரிப்பாளர் கவுன்சிலில் பேசி முடிவு எடுக்கப்படும்.
விஷால், சிம்பு
சிலர் தங்களையும் மிரட்டியதாக விஷாலும், சிம்புவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.