Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரஜினியின் 'தத்து அப்பா' பங்கேற்கும் 'பெருமாள் கோயில் உண்டசோறு'!
பாலம் கல்யாணசுந்தரம்... இவரைத் தெரியாதவர்கள் ரொம்ப குறைவாகத்தான் இருப்பார்கள்.
பணியில் இருந்து சம்பாதித்த சம்பளம் முழுவதையும் அப்படியே பாலம் அமைப்புக்கு அளித்தார். அவரது சேவையை பாராட்டி அமெரிக்கா பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியது. அதையும் அப்படியே அறக்கட்டளைக்குக் கொடுத்து விட்டார்.
இவரது உயரிய சமூக சேவையை கௌரவிக்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது அப்பாவாக தத்தெடுத்துக் கொண்டார்... அவருக்கு பணமும் விலை உயர்ந்த பொருட்களும் வழங்கினார். அதையெல்லாம் அப்படியே பாலம் அமைப்பிற்கு வழங்கி விட்டார். அப்படிப் பட்டவர் முதல் முறையாக ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அடுத்த தலைமுறைக்கு நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான் என்பதை வலியுறுத்தும் பெருமாள் கோயில் உண்டசோறு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலம் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு இசையை வெளியிடுகிறார்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை எம்ஆர் தியேட்டர் - கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ்ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா என படத்தின் அத்தனை நடிகர் நடிகர்களும் புதுமுகங்களே.
டிஜே ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஆர் கார்த்திக் - பாலபாரதி இசை அமைக்கின்றனர். எழுதி இயக்குகிறார் விடி ராஜா.
படம் குறித்து இயக்குநர் விடி ராஜா கூறுகையில், "படத்தில் மக்களுக்கு உபயோகமான ஒரு கருத்தைச் சொல்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் வீடு, பணம், கார், தோட்டம் என்று சேர்த்து வைக்கிற எதுவுமே உபயோகமில்லாததாகி விடும். நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான்.
சுற்றுச் சூழலலுக்கு முதல் எதிரி பிளாஸ்டிக்தான். இந்த கருத்தைத்தான் இந்தப் படத்தின் மூலம் சொல்கிறோம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாலம் அமைப்பின் கல்யாணசுந்தரத்தை அழைத்தோம். படம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டதும் வரச் சம்மதித்தார்.
டிசம்பர் 1-ம் தேதி காலை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் கல்யாணசுந்தரம் முன்னிலையில் இயக்குனர் பேரரசு இசைத்தட்டை வெளியிட இயக்குனர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ஜே.சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொள்கிறார்கள்," என்றார்.