Don't Miss!
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது ஆர்வக் கோளாறா... திட்டமிட்ட சதியா?
பெரிய பட்ஜெட் படங்கள் அல்லது பெரிய ஹீரோக்களின் படங்களை இணையவாசிகளிடமிருந்து காப்பாற்றுவதே இன்றைக்குப் பெரும் பாடாகிவிட்டது.
இந்தப் படங்களின் ரகசியம் என்று எதையும் காத்து வைத்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தர வழியே இல்லாமல் போய்விட்டது. விஞ்ஞான வளர்ச்சி இது என்பதை அனைவருமே ஒப்புக் கொண்டாலும், அதையும் தாண்டி இந்தப் படங்களின் காட்சிகள் வெளியாகாமல் தடுக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் குழுவினரும்.
சமீபத்தில் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின இரு வீடியோக்கள்.
ஒன்று, முதல் நிலை நடிகரான ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி படத்தின் முக்கியமான படக்காட்சி படமாக்கப்பட்ட போதே, செல்போனில் துல்லியமாகப் படம்பிடித்து அதை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துவிட்டனர்.
மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ரஜினி வருவது போன்ற காட்சி அது. இயக்குநர் அந்தக் காட்சியை ஓகே செய்யும் தருணமாகப் பார்த்து பதிவு செய்துள்ளனர். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
விமான நிலையத்துக்குள் இருந்த ரசிகர் ஒருவர்தான் இப்படிச் செய்துவிட்டார் என்று தெரிய வந்ததும், இதுபோல இனி பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்து, அஜீத்தின் வேதாளம் படக் காட்சி ஒன்றும் நேற்று வெளியானது.
இதற்கு முன்பு விஜய் நடித்த புலி படத்தின் டீசர், ட்ரைலர், ஸ்டில்கள் இப்படி வெளியாகி, அது போலீஸ் வழக்கு வரை போனது நினைவிருக்கலாம்.
ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், சிலர் இதை வேண்டுமென்றே திட்டமிட்டுத்தான் செய்கிறார்களோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கியுள்ளது கோலிவுட்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!