Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை பேச வைக்காதீங்க, அப்புறம் பல மேட்டர் வெளியே வரும்: நடிகர் பேட்டி
திருவனந்தபுரம்: நானும், எனது மனைவியும் பிரிய சில பிரபலங்கள் தான் காரணம் என்று மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்திற்கு பிறகு மஞ்சு மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார்.
அவர்கள் பிரிய நடிகை காவ்யா மாதவன் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து திலீப் கூறுகையில்,
மஞ்சு
நானும், மஞ்சுவும் கணவன் மனைவி என்பதையும் தாண்டி நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி இருந்தது.
பிரிவு
சில பிரபலங்கள் எங்கள் வாழ்வில் நுழைந்து மஞ்சுவின் மனதை மாற்றினார்கள். அதன் பிறகே எங்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. விவாகரத்து தொடர்பாக மனு தாக்கல் செய்தபோது அதில் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேன்.
இமேஜ்
எங்கள் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த பிரபலங்கள் தங்களின் இமேஜை பெரிதும் மதிப்பவர்கள். அவர்களின் இமேஜை மனதில் வைத்தே நான் அவர்களின் பெயர்களை வெளியே சொல்லவில்லை. என்னை பேச வைக்க வேண்டாம். நான் வாயை திறந்த பல விஷயங்கள் வெளியே வரும்.
ஆனால்
தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தால் அந்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன். மஞ்சு படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சி. அவர் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்றார் திலீப்.