Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்க விவகாரம்.... இப்போதைக்கு கட்டடத்தை ஆரம்பிக்கவே விடமாட்டாங்க!
நடிகர் சங்க கட்டடத்தை இப்போதைக்கு ஆரம்பிக்க முடியாதபடி ஒரு தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. காரணம் 33 அடி தெருவை ஆக்கிரமித்து கட்டட ப்ளான் வடிவமைக்கப்பட்டதுதான்.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து இன்றல்ல... பல மாதங்களுக்கு முன்பே நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் கவனத்துக்கு பலரும் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் அலட்சியமாக, 'எல்லாம் வக்கீல் பாத்துப்பார்... நாங்க சட்டப்படிதான் செய்கிறோம்,' என்று கூறிவிட்டனர். அந்த அலட்சியத்தின் விளைவுதான் இந்தத் தடை என்கிறார்கள் இப்போதைய நிர்வாகத்துக்கு நெருக்கமான சிலர்.
சங்க கட்டடத்துக்கு அடித்தளம் அமைப்பதற்கு குழிகள் தோண்ட டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
உண்மையில் இந்த கட்டடம் அமைவதை அந்த ஏரியாவில் உள்ள முக்கியப் புள்ளிகள் சிலர் விரும்பவில்லையாம்.
முன்பு சரத்குமார் தலைவராக இருந்த காலத்தில் சத்யம் சினிமாஸுடன் ஒப்பந்தம் போட்டு, 10 ஸ்கிரீன்கள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான அனைத்து வேலைகளையும் சத்யம் சினிமாஸ் மேற்கொண்டபோது, அந்தப் பகுதிவாசிகள் பெயரில் வழக்குப் போட்டு, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட வைத்தார்கள்.
"இப்போது ஆக்கிரமிப்புக்காக வழக்குப் போட்டுத் தடுத்து வைத்துள்ளனர். இந்த 33 அடி தெரு விவகாரம் முடிவுக்கு வந்தாலும், இந்தக் கட்டடத்துக்கு எதிராக நிச்சயம் இன்னொரு வழக்குத் தொடர்வார்கள். அப்போது சுற்றுச்சூழலைக் கையில் எடுப்பார்கள். காரணம் அந்தப் பகுதியில் இப்படி ஒரு கட்டடம் வருவதையே அங்குள்ள முக்கியப் புள்ளி ஒருவர் விரும்பவில்லை," என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
அப்போ விஷால் திருமண சபதம் அவ்ளோதானா?