Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரஜினியுடன் படம் எடுத்துக் கொள்ள ரசிகர்களுக்கு 'பார் கோடுடன்' கூடிய அனுமதி அட்டை!
8 ஆண்டுகளுக்குப் பிறகு தன் ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி. ஆனால் இதை சந்திப்பு என்று சொல்ல வேண்டாம்... வெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு என்றே கூற வேண்டும் என்கிறது ராகவேந்திரா மண்டப வட்டாரம்.
இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து ரசிகர்களுக்கும் பார் கோடு கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரஜினியின் நேரடி மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட அடையாள அட்டை இது. அந்த அட்டையை ஸ்கேன் செய்த பிறகே படமெடுத்துக் கொள்ள அனுமதி கிடைக்கும்.
மே 15 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வு. நாளொன்றுக்கு 1000 முதல் 1500 ரசிகர்களுடன் ரஜினி படமெடுத்துக் கொள்ள உள்ளார்.
படமெடுத்துக் கொள்ள வரும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த 5 நாட்களும் காலை சிற்றுண்டி, மோர், பிற்பகல் உணவு, மாலை சிற்றுண்டி என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வெளியூரிலிருந்து வரும் ரசிகர்கள் அனைவரும் காலை 7 மணிக்கே மண்டபத்துக்கு வந்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மண்டபத்தில் ரசிகர்களுடன் ஆலோசனை, கலந்துரையாடல் என எதிலும் ரஜினி பங்கேற்கப் போவதில்லையாம். அதே போல மாலை, பரிசுகள், காலில் விழுதல் என எதுவும் இருக்கக் கூடாது என்பதையும் ஸ்ட்ரிக்டாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அடையாள அட்டை இல்லாத அல்லது போலியான அடையாள அட்டைகளோடு வருபவர்கள் நிச்சயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே வந்து தர்மசங்கடப்பட வேண்டாம் என ஏற்கெனவே ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.