Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஐஸ்வர்யா ராயுடன் லடாய், பிரிவு: மவுனம் கலைத்த அபிஷேக் பச்சன்
மும்பை: ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் பிரியப் போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்பதை அபியே தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் நடித்த சரப்ஜித் பட நிகழ்ச்சிக்கு அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் ஜோடியாக வந்திருந்தார். இருவரையும் ஜோடியாக புகைப்படம் எடுக்க விரும்பிய பத்திரிகையாளர்கள் அவர்களை சேர்ந்து நிற்குமாறு கூறினர்.
அபிஷேக்கோ, ஐஸ்வர்யாவை வைத்து போட்டோ எடுங்கள் என கூறிவிட்டு இடத்தை காலி செய்துவிட்டார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே பிரச்சனை, அவர்கள் பிரியப் போகிறார்கள் என்ற பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் இது குறித்து அபிஷேக் கூறுகையில்,
நான் ஐஸ்வர்யாவை எவ்வளவு காதலிக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். அதே போன்று அவர் என்னை எந்த அளவுக்கு காதலிக்கிறார் என்பது எனக்கு தெரியும். இந்நிலையில் மீடியாக்கள் எங்கள் உறவை பற்றி யூகிக்க முயற்சித்தால் தாராளமாக செய்யுங்கள்.
என்னால் மீடியாக்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைக்க முடியாது என்றார்.