Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!
இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த "சண்டி வீரன்" படத்தின் வெளியீட்டு உரிமையை வெற்றிகரமாக கைபற்றிய ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம்
பாலா இயக்கத்தில் பரதேசி, மற்றும் மிஷ்கின் இயக்கிய பிசாசு போன்ற படங்களைத் தயாரித்தது பி ஸ்டுடியோஸ். பாலாவின் சொந்தப் பட நிறுவனம் இது.
தற்போது சற்குணம் இயக்கத்தில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிக்கும் சண்டி வீரன் என்னும் படத்தைத் தயாரித்துள்ளது.
சண்டி வீரன் படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை எம்எஸ் சரவணனின் ஸ்ரீ கீரீன் புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது.
ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சலீம், வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றிப் படங்களை இதற்கு முன் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சலிம் திரைப்படத்தையும், சிட்டி ஏரியாவில் வேலையில்லா பட்டதாரி மற்றும் கயல் படத்தையும், செங்கல்பட்டு ஏரியாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிட்சா 2, வெள்ளைக்கார துரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இப்போது சண்டி வீரனை தமிழகம், கேரளா, கர்நாடகாவில் வெளியிடவிருக்கின்றனர். நய்யாண்டி படத்துக்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் இது.