Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பாகுபலி படத்தில் ஏன் நடிக்க மறுத்தேன்?: ஸ்ரீதேவி விளக்கம்
மும்பை: தான் இன்னும் பாகுபலி படத்தை பார்க்கவில்லை என்று பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். மேலும் சிவகாமியாக நடிக்க மறுத்தது குறித்தும் பேசியுள்ளார்.
சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி 2012ம் ஆண்டு வெளியான இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் திரும்பி வந்தார். இந்நிலையில் அவர் மாம் இந்தி படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஸ்ரீதேவி பிசியாக உள்ளார்.
பாகுபலி
பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக நடிக்குமாறு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி முதலில் ஸ்ரீதேவியிடம் தான் கேட்டார். அவர் மறுக்கவே அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.
ஸ்ரீதேவி
நான் இன்னும் பாகுபலி படத்தை பார்க்கவில்லை. நான் சிவகாமியாக நடிக்க மறுத்ததை பெரிய விஷயமாக்கி பேசுகிறார்கள். ஆளாளுக்கு ஒரு காரணத்தை கற்பனையாக கூறுகிறார்கள் என்றார் ஸ்ரீதேவி.
காரணம்
சிவகாமியாக நடிக்க மறுத்ததற்கு காரணங்கள் உள்ளது. பாகுபலி படம் இரண்டு பாகமும் வெளியான பிறகு ஏன் நடிக்கவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள் என்று ஸ்ரீதேவி தெரிவித்தார்.
படங்கள்
நான் பல படங்களில் நடிக்க மறுத்துள்ளேன். அதை பற்றி ஏன் யாருமே பேசுவது இல்லை? பாகுபலி பற்றி மட்டும் ஏன் பேசுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீதேவி.