twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ருதி பாலா... 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்துக்காக மேலும் ஒரு கேரள நாயகி!

    By Shankar
    |

    கேரளத்திலிருந்து மற்றுமொரு நடிகையைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா. அவர் ஸ்ருதி பாலா. ஏ வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

    ‘மிர்ச்சி' செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘ரோபோ' சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    தனது தமிழிப் பட பிரவேசம் குறித்து ஸ்ருதி பாலா கூறுகையில், "விளம்பரப் படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன.

    Sruthy Bala, yet another Kerala heroine comes to K-Town

    சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு சுலபமாய் அமைந்தது.

    எனது முதல் படம் நல்ல கதையுடையதாய் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் இக்கதையை கூறினார். ‘அங்காடி தெரு' படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளா இவர் என்று ஆச்சரியபர்பட்டேன்.

    Sruthy Bala, yet another Kerala heroine comes to K-Town

    ரொம்ப நல்லவன்டா நீ நகைச்சுவை திரைப்படம். எனது கதாப்பாத்திரம் ஒரு தைரியமான படித்த பெண். ‘மிர்ச்சி' செந்தில் எனக்கு ஜோடியாக வருகிறார். துளியும் அலட்டல் இல்லாத மனிதர். இருப்பினும், ஷூட்டிங் சமயத்தில் செந்தில் , ‘ரோபோ' சங்கர் இருவரும் என்னை வம்பு செய்து கொண்டே இருப்பார்கள்.

    Sruthy Bala, yet another Kerala heroine comes to K-Town

    ‘ரோபோ' எப்பொழுதும் கலகலவென இருப்பார். அவர் இருந்தால் ஷூட்டிங் முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும்," என்றார்.

    English summary
    Sruthy Bala, the pretty lady from God's own country is the new arrival for our K-town. The charming actress is excited about her debut Tamil film ‘Romba Nallavan Da Nee' directed A Venkatesh starring ‘Mirchi' Senthil and ‘Robo' Shankar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X