Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழ், தெலுங்கு, கன்னட மாநிலங்களின் செல்ல மகன் நான்... ராஜமௌலி பெருமிதம்
ஹைதராபாத்: பத்மஸ்ரீ விருதிற்கு கர்நாடகா அரசு என்னை சிபாரிசு செய்ததை நான் தாமதமாகத் தான் தெரிந்து கொண்டேன் என்று இயக்குநர் ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலிக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த விருது விஷயம் தெரிந்ததும் ராஜமௌலிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் இந்த விருதிற்கு தான் தகுதியானவன் அல்ல எனினும் விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் "ஆந்திர அரசு எனது பெயரை விருதுகளுக்கு சிபாரிசு செய்ய முயன்றபோது நான் அதனைத் தடுத்து விட்டேன்.
ஆனால் எனக்கு விருது கிடைத்த செய்தி அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது எப்படி நடந்தது என்று நான் விசாரித்த பின்னர் கர்நாடகா அரசு எனது பெயரை சிபாரிசு செய்ததை அறிந்து கொண்டேன்.
நான் பிறந்தது கர்நாடகா, படித்தது ஆந்திரா வேலை செய்வது தமிழ்நாட்டில். இதன் மூலம் 3 மொழி பேசும் மாநில மக்களின் செல்ல மகனாக நான் இருக்கிறேன்.
எல்லா மாநிலங்களின் மகனாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ராஜமௌலி பெருமையுடன் கூறியிருக்கிறார்.ராஜமௌலி தற்போது பாகுபலி 2 படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.