Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
காட்சி நேரம்... எஸ்எஸ் ராஜமௌலியின் அண்ணன் எஸ்எஸ் காஞ்சி இயக்கும் படம்!
கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தைத் தயாரித்து வரும் ராமா ரீல்ஸ் சுதிர் புதோடா தனது அடுத்த படத்தையும் அறிவித்துள்ளார்.
அந்தப் படம் காட்சி நேரம். படத்தை இயக்குபவர் எஸ் எஸ் காஞ்சி. தெலுங்கில் பெரிய ஸ்க்ரிப்ட் ரைட்டர். இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலியின் சொந்த அண்ணன்.
இந்த படத்தில் ரணதீர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ருக்ஷார் மீரா நடிக்கிறார். கார்த்திக், சத்யா, அப்ஜித் சர்மா, ஆதித்யா ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரியாக சுப்ரீத் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - பூபதி.கே, இசை - மரகதமணி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ்.எஸ்.காஞ்சி.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "இன்றைய சமுதாயம் ஒழுக்கமான முறையில் இருந்து எவ்வாறு சீரழிந்து கொண்டு போகிறது என்பதை விஷுவல் மீடியாவுக்கே உரிய அழுத்தமான காட்சிகளோடு அம்பலப்படுத்துகிற படமாக இருக்கும், காட்சி நேரம்.
ஒரு மாடர்ன் தம்பதியினரைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரவுடித்தனம் பண்ணும் முரட்டுத்தனமான படித்த நான்கு இளைஞர்களுக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையே எதிர்பாரத ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அந்த பிரச்னையால் என்ன விபரீதங்கள் நடக்கின்றன... மக்களின் இன்றைய மனநிலையும், அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தனத்தையும் வெளிக்காட்டுவதாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது," என்கிறார்.