Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்பு, அனிருத் பாடலை சும்மா விடக் கூடாது, தொடர்ந்து எதிர்க்க வேண்டும்- பா.விஜய்
சென்னை: இந்த மாதிரி பாடல்களை தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவரும், நடிகருமான பா.விஜய் பீப் பாடலிற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாட்டில் தற்போது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பாடலிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்து சிம்பு, அனிருத் இருவர் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பா.விஜய் இந்தப் பாடல் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த மாதிரி பாடல்களை வேண்டுமென்றே வைரல் ஆகவேண்டும் என்பதற்காக இப்படி சம்மந்தப்பட்டவர்களே லீக் செய்கிறார்கள்.
இதன் மூலம் 10 லட்சம் பேர் கேட்க வேண்டிய இந்த பாடலை,10 கோடி பேர் வரை கேட்கின்றனர். இப்பாடலை எதிர்த்து போராடுபவர்கள் இன்று மட்டுமே குரல் கொடுப்பார்கள் அப்படியிருக்க கூடாது.
தொடர்ந்து இப்பாடலை எதிர்க்க வேண்டும், இனி யாரும் இந்த மாதிரியான பாடல்களை வெளியிட அஞ்ச வேண்டும். மேலும் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் இருப்பது போல பாடல்களுக்கும் சென்சார் கொண்டுவர வேண்டும்.
சென்சார் கட்டாயம் என்னும் நிலை வந்தால் இந்த மாதிரி பாடல்கள் வெளியாவது கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்று பா.விஜய் கூறியிருக்கிறார்.