Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புலிப்பார்வை இசை வெளியீட்டு விழா... மாணவர்கள் முற்றுகை.. சீமானைக் கைது செய்ய கோரிக்கை!
சென்னை: புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவில் திடீரென புகுந்து போராட்டம் நடத்தினர் முற்போக்கு மாணவர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள்.
மாணவர் அமைப்பின் தலைவர் மாறன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது, சீமானைக் கைது செய்யக் கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சிங்கள வெறியர்களால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனை, சிறார் போராளியாகச் சித்தரித்துள்ளதாக புலிப்பார்வை படத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலச்சந்திரன் படுகொலை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்தெல்லாம் சர்வதேச விசாரணை நடக்கும் வேளையில், அதை திசை திருப்பும் ராஜபக்சேவின் முயற்சியே புலிப்பார்வை போன்ற படங்கள் என்று கூறி தமிழ் உணர்வாளர்கள், மாணவர் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
ஆனால் புலிப்பார்வை படத்துக்கு ஆதரவு அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று கலந்து கொண்டார்.
சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அதற்கு முன்பே மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரையரங்குக்குள் வந்துவிட்டனர்.
விழா நடந்து கொண்டிருந்தபோது, திரையரங்குக்குள் இருந்த மாணவர்கள் - இளைஞர்கள் சுமார் 50 பேர், திடீரென எழுந்து, மேடையில் இருந்த பாரிவேந்தரையும், சீமானையும் பார்த்து, "எங்களுக்கு சில கேள்விகள் இருக்கின்றன. முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள்" என்று உரக்க குரல் கொடுத்தனர்.
ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து பேசினர். எனவே 'துரோகி சீமானைக் கைது செய்யுங்கள்.. அவரிடம் நாங்கள் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்', என்று தொடர் முழக்கமிட, அங்கிருந்த நாம் தமிழர், ஐஜேகே, பாஜக கட்சியினர் மாணவர்களைத் தாக்கினர்.
பாதுகாப்புக்காக இருந்த போலீசார் தலையிட்டு, மாணவர்களைக் கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர்.