Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓ காதல் கண்மணியை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!
மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள ‘ஓ காதல் கண்மணி' படத்தின் தமிழக விநியோக உரிமையைப் பெற்றது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்.
துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி-க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பி.சி.ஸ்ரீராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் தனது ‘மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் மூலம் படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் லிவிங் டுகெதர் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையாக இருக்கும் என்பார்கள். அலைபாயுதே படத்தின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது.
இதனிடையே படத்தின் முதல் டீசர் இணையதளத்தில் வெளிவந்து, ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியாகிய 2 நாட்களுக்குள் டிரைலரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ஓ காதல் கண்மணி படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் வாங்கியுள்ளது.
சமீபத்தில் இதே நிறுவனம் தான் ‘ரஜினி முருகன்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் வாங்கியது. இந்நிலையில் ஓ காதல் கண்மணி படத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஓ காதல் கண்மணி' ஏப்ரல் மாதத்திலும், ‘ரஜினி முருகன்' மே மாதத்திலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.