Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சுசீந்திரனின் அடுத்த ஹீரோ ஜெயம் ரவி?
சென்னை: இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தனி ஒருவன் நாயகன் ஜெயம் ரவி.
சுசீந்திரன் கடைசியாக இயக்கிய பாயும்புலி திரைப்படம் ரசிகர்களின் நெஞ்சங்களில் எதிர்பார்த்த அளவிற்கு பாயவில்லை. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியுற்ற நிலையில் சுசீந்திரன் தனது அடுத்த படத்தை தற்போது தொடங்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் தனி ஒருவன் படத்தின் மூலம் தரணியெங்கும் புகழ்பெற்ற ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். தற்போது மிருதன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி தொடர்ந்து ரோமியோ ஜூலியட் புகழ் லட்சுமணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இந்த 2 படங்களையும் தவிர்த்து 3 வதாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. ரோமியோ ஜூலியட் மற்றும் தனி ஒருவன் படங்களின் மூலம் இந்த ஆண்டின் வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.
எனவே தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமுடன் இவர் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரவியின் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பூலோகம் படத்தை வெளியிடும் முயற்சிகளில் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் இறங்கி இருக்கின்றனர்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜெயம் ரவி காணப்படுகிறார்.மற்றவர்களுக்கு எப்படியோ ஜெயம் ரவியைப் பொறுத்தவரை 2015 அவருக்கு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது.