Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாவீரன் கிட்டு.... இது சுசீந்திரனின் அடுத்த படத் தலைப்பு!
விஷ்ணுவை திரையில் ஹீரோவாக வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகப்படுத்தியவர் சுசீந்திரன். இன்று விஷ்ணு ஒரு முக்கிய நடிகராகிவிட்டார்.
மீண்டும் ஜீவா படத்தில் இருவரும் இணைந்தனர்.
இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் - பார்த்திபன் நடிக்க, நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்குகின்றனர். இந்தப் படத்துக்கு மாவீரன் கிட்டு என்று தலைப்பிட்டுள்ளனர்.
படத்தின் நாயகியாக ஸ்ரீ திவ்யா ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவா படத்தில் ஏற்கெனவே ஸ்ரீதிவ்யாவும் விஷ்ணுவும் ஜோடி சேர்ந்தது நினைவிருக்கலாம். வழக்கம்போல சூரிக்கு இந்தப் படத்தில் முக்கிய வேடம்.
மாவீரன் கிட்டு படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி பழனியில் ஆரம்பமானது, தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது,
படத்தின் கதை ஈழப் பிரச்சினையுடன் தொடர்புடையதா என்ற கேள்விக்கு பதிலளித்த சுசீந்திரன், "மாவீரன் கிட்டு' இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம்," என்று முடித்துக் கொண்டார்.
படத்துக்கு கவிஞர் யுகபாரதி வசனம் எழுதி, பாடல்களையும் இயற்றுகிறார். டி இமான் இசையமைக்கிறார்.