Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அட, சரியான நேரத்தில் தான் 'சுட்டப் பழம் சுடாத பழம்' ரிலீஸாகியிருக்கு
சென்னை: நாட்டில் நிமிடத்திற்கு ஒரு குழந்தை கடத்தப்படுகையில் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் சுட்டப் பழம் சுடாத பழம்.
ஒரு தாய் குழந்தையை பத்து மாதம் சுமந்து அதை பெற்றெடுப்பதற்குள் மறுபிறவி எடுக்கிறாள். இப்படி அரும்பாடுபட்டு பெற்றெடுக்கும் குழந்தைகள் நம் நாட்டில் மாயமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிமிடத்திற்கு ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகின்றனர். அதில் 11 ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்றே தெரியாமல் போகிறது. படிக்கவே பயங்கரமாக இருக்கிறதே பெற்றவர்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்.
பெற்றவர்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கும் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சுட்டப் பழம் சுடாத பழம். சட்டசபை தேர்தலால் ஒத்தி வைக்கப்பட்ட இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
பேய் படங்களை தேடிப் பிடித்து பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தையும் பார்க்கலாமே.