Don't Miss!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- News முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளிக் கும்மி… காரணம் என்ன?
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சர்ச்சை வேண்டாம்.... தேசிய விருதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்! - அக்ஷய் குமார்
மும்பை: எனக்கு தேசிய விருது கொடுத்ததில் உடன்பாடில்லை என மக்கள் கருதினால் அதை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளட்டும் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
ருஸ்டம் படத்தில் நடித்ததற்காக அக்ஷய் குமாருக்கு 2016-ம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்தது. முதல் முறையாக அவர் தேசிய விருது பெறுகிறார்.
ஆனால் அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது நியாயமல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் தேசிய விருது வழங்கியிருப்பதில் மிகுந்த பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கருத்துத் தெரிவித்தனர்.
இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்ஷய் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "ஒருவர் தேசிய விருதை பெறும்போது அவரைச் சுற்றிலும் விவாதம் நடப்பதை கடந்த 25 ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல. 'அவருக்கு தேசிய விருது வழங்க கூடாது, மற்றவருக்கு வழங்கி இருக்க வேண்டும்' என்று கூறி சிலர் எப்போதும் சர்ச்சையைக் கிளப்புவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
நடிக்க வந்து 26 ஆண்டுகள் கழித்து தேசிய விருது பெற்றிருக்கிறேன். இந்த விருது பெற நான் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதினால், அதனை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளட்டும். வருத்தமில்லை," என்றார்.