Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோலிவுட்டில் ஜெயிக்க அந்த ஒன்னே ஒன்னு போதும்: ஜெயராமின் மகன் காளிதாஸ்
சென்னை: தமிழ் திரையுலகில் இருக்க பணம் மற்றும் இன்னாரின் மகன் என்பது போதாது திறமை இரு்தால் போதும் என நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
அமுதேஷ்வர் இயக்கத்தில் நாளை வெளியாகும் மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் ஹீரோ நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். சாக்லேட் விளம்பரத்தில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காளிதாஸ்.
இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறுகயில்,
கோலிவுட்
தமிழ் திரையுலகில் இருக்க பணம் மற்றும் இன்னாரின் மகன் என்பது போதாது திறமை இரு்தால் போதும். நான் ஜெயராமின் மகன் என்பதால் தமிழ் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மோகன்லால்
மலையாள திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது மோகன்லால். மோகன்லாலின் படங்களை ரிலீஸான அன்றே தியேட்டரில் பார்த்துவிடுவேன். புலிமுருகன் படத்தையும் முதல் நாளே பாரத்துவிட்டேன்.
மம்மூட்டி
மம்மூட்டி என் குடும்ப உறுப்பினர் போன்று. எனக்கு படிப்பிலும், நடிப்பிலும் அறிவுரை வழங்கி வருபவர் அவர். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்குமாறு கூறியது அவர் தான் என்றார் காளிதாஸ்.
தேசிய விருது
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கிய காளிதாஸ் மிமிக்ரி செய்வதில் வல்லவர். மீன்குழம்பும் மண் பானையும் படத்திலும் மிமிக்ரி செய்துள்ளாராம்.