Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
சென்சாராகி வெளிவராத 464 தமிழ்ப் படங்கள்!
தமிழ் சினிமாவில் சென்சாராகி சான்று பெறும் எல்லாப் படங்களும் வெளியாவதில்லை.
வெளியான படங்களைவிட பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை, அப்படி வெளியாகாமல் உள்ள படங்களின் எண்ணிக்கை மட்டும் 464.
குறிப்பாக 2014-ம் ஆண்டு மட்டும் 215 படங்கள் வெளியாகின. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இது மிகப் பெரிய எண்ணிக்கை. அதே நேரம் இந்த ஆண்டு மட்டும் தணிக்கை சான்றிதழ் பெற்று ரிலீசாகாமல் போன படங்கள் 144 ஆகும்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் சென்சாராகி இன்னும் வராமல் உள்ள படங்கள் 320.
ஆக 464 படங்கள் பெட்டியில் தூங்கிக் கொண்டுள்ளன. இவற்றை வெளியிட முடியாமல் அவற்றின் தயாரிப்பாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டது இன்னொரு சோகக் கதை.
இந்தப் படங்கள் வெளியாகாமல் கிடப்பதற்கு முக்கிய காரணம், நிதிச் சிக்கல்கள்தான். காப்பி, கதைப் பிரச்சினை, வழக்குகள் போன்றவை இன்னும் சில காரணங்கள்.
புதிதாக பதவி ஏற்கப் போகும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்துவார்களா?