Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தாசரி நாராயண ராவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஃபெப்சி, இயக்குநர் சங்கம் இரங்கல்
சென்னை: பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவ் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் ஃபெப்சி ஆகிய திரையுலக அமைப்புகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.
நேற்று மாலை ஹைதராபாதில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் தாசரி நாராயண ராவ் காலமானார். அதையொட்டி, தெலுங்கு சினிமா 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறது.
தாசரி நாராயண ராவ் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ள இரங்கல்:
இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என தெலுங்கு சினிமாவின் சகாப்தமாக விளங்கிய திரு. தாசரி நாராயண ராவ் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை கொள்கிறோம்.
தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேல் படங்களை இயக்கியதோடு பல படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களும் எழுதி சாதனை புரிந்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் பல வழங்கி கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராக நாட்டுக்கு சேவை புரிந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகின் வழிகாட்டியாக திகழ்ந்த அவரது மறைவு தென்னிந்திய சினிமா உலகிற்க்கே மாபெரும் இழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரை துறையினருடன் துக்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்.
திரைப்பட தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சி, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் போன்றவையும் தாசரி நாராயண ராவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!