Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இணைய தளங்களா.. வேண்டவே வேண்டாம்.. தடை போடும் தமிழ்ப் பட தயாரிப்பாளர்கள்!!
இனி தமிழ் சினிமா நிகழ்ச்சிகளுக்கு இணையதளப் பத்திரிகையாளர்களை அழைக்கவே கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
இன்றைக்கு தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகின் அத்தனை மொழிப் படங்களுக்கும் செய்திகள், விளம்பரம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இணைய தளங்கள்தான் முதல் வாயிலாக உள்ளன.
சினிமா தொடர்பான செய்திகளை இணையதளங்கள் மூலமே வெளிநாட்டு ரசிகர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை, இணையதள பத்திரிகையாளர்களை இனி எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கவே கூடாது என கூறுவதும், பின்னர் சத்தமின்றி அழைப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு மீண்டும் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.
இன்று திடீரென தமிழ் சினிமா பிஆர்ஓக்களை அழைத்த தயாரிப்பாளர் சங்கம், இனி எந்த இணைய தளப் பத்திரிகையாளர்களையும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது. தேர்ந்தெடுத்த 45 அச்சுப் பத்திரிகையாளர்களை அழைத்தால் மட்டும் போதும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டு, அந்த 45 இதழ்களின் பெயர்களையும் குறித்துக் கொடுத்துள்ளனர்.
அச்சுப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இணையான அந்தஸ்தை இணையதள பத்திரிகைகளுக்கும் வழங்கும் சட்டத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது அன்றைய மன்மோகன் சிங் அரசு. இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் போட்டுள்ள இந்தத் தடை பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது மட்டுமல்ல, பிரஸ் கவுன்சில் விதிகளின் படி குற்றமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொன்று, இந்தியாவில் எந்த மொழி சினிமாவிலும் இதுபோன்ற தடை என்பதே கேள்விப்படாத ஒன்று. சர்வதேச அளவில் சினிமா என்பது இப்போது இணைய தளங்களைச் சார்ந்தே உள்ளது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்