twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரியணும்: லீவு லெட்டர் எழுதிய போலீஸ்காரர்

    By Siva
    |

    ஹைதராபாத்: பாகுபலி 2 படம் பார்க்க விடுமுறை கோரி தெலுங்கானாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

    ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.

    Telangana policeman applies for leave to watch Baahubali 2

    இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வாரங்காலை சேர்ந்த போலீஸ்காரரான விஜயகுமார் என்பவர் பாகுபலி 2 படம் பார்க்க விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

    கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அதனால் வரும் 28ம் தேதி ரிலீஸாகும் பாகுபலி 2 படத்தை பார்க்க விரும்புகிறேன்.

    எனவே, 28ம் தேதி எனக்கு விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    English summary
    A policeman from Warangal has applied for leave on april 28th to watch Baahubali 2 just to know why Kattappa killed Baahubali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X