Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினி, விஜய் படங்கள் என்றாலே சிலர் சூழ்ச்சி செய்து சுருட்ட நினைக்கின்றனர்! - கலைப்புலி தாணு
சென்னை: ரஜினி, விஜய் படங்கள் என்றாலே சில தியேட்டர்காரர்கள் சூழ்ச்சி செய்து பணம் சுருட்ட திட்டமிடுகின்றனர், என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு குற்றம்சாட்டியுள்ளார்.
தாணு தயாரிப்பில் விஜய் நடித்துள்ள தெறி படம் இன்று உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியானது. ஆனாலும் தமிழ் நாட்டில் பெரிய ஏரியாவான செங்கல்பட்டில் வெளியாவது பிரச்சினைக்குள்ளானது.
இந்த ஏரியா தியேட்டர்கள் தெறி படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம் என்று கூறி வாங்க மறுத்தன.
இந்த நிலையில் தானே சொந்தமாக சில அரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளார் தாணு.
செங்கல்பட்டு ஏரியாவின் முக்கிய அரங்குகளான காசி, வெற்றி உள்ளிட்ட பல அரங்குகளில் தெறி வெளியாகாததால் வெறிச்சோடின. இது ரசிகர்களை மிகவும் ஆத்திரத்துக்குள்ளாக்கியது. காசி தியேட்டர் மீது கல்வீச்சும் நடந்தது.
ஆனால் தியேட்டர்காரர்களின் நெருக்கடிக்கு தாணு அசைந்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், "செங்கல்பட்டில் நிறைய திரையரங்குகளில் படங்கள் திரையிட்டு இருக்கிறோம். மாயாஜால், ஐநாக்ஸ் விருகம்பாக்கம், ஏஜிஎஸ், எஸ் 2, கணபதிராம், பொன்னேரி வெற்றிவேல், வேளச்சேரி லக்ஸ், வேளச்சேரி பிவிஆர் ஆகிய திரையரங்குகளில் திரையிட்டுள்ளோம்.
மற்ற திரையரங்குகளில் ரஜினி, விஜய் படங்கள் என்றாலே சிலர் சூழ்ச்சி செய்து பணத்தைச் சுருட்ட முயற்சி செய்கிறார்கள். சில திரையரங்க உரிமையாளர்கள் நாங்கள் பணம் தர மாட்டோம், படத்தை ஓட்டி பணம் தருகிறோம் என்கிறார்கள்.
ரூ 100 கோடி படம் எடுத்திருக்கிறோம், ஆனால் டெபாசிட், அட்வான்ஸ் என எந்த தொகையுமே தராமல், படத்தை எடுக்கப் பார்க்கிறார்கள். இது நியாயமா... சினிமா மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளது," என்றார்.