Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாலாவுக்கு இது சவாலான படம் - இளையராஜா
தாரை தப்பட்டை படம் பாலாவுக்கு சவாலான படமாக இருக்கும் என்று இளையராஜா கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்று வரும் "தாரை தப்பட்டை' படப்பிடிப்புத் தளத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா புதன்கிழமை சென்றார்.
திரைப்பட இயக்குநர் பாலா இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு தஞ்சாவூர் கரந்தை வடவாற்றுப் பாலப் பகுதியில் ஒரு மாதமாக நடைபெறுகிறது.
வரவேற்பு
இது இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரமாவது படம். இந்நிலையில், இந்தப் படப்பிடிப்புத் தளத்துக்கு புதன்கிழமை சென்ற அவருக்கு மங்கள இசை இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
சவாலான படம்
அப்போது அவர் கூறுகையில், "இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டதன்பேரில் போகும் வழியில் இந்தப் படப்பிடிப்பைப் பார்க்க வந்தேன். பாலாவுக்கு மற்ற எல்லா படங்களையும்விட இது சவாலான படம். இதை அவர் சிரத்தையோடு உருவாக்கி வருகிறார்," என்றார் இளையராஜா.
தப்பாட்டம்
பின்னர் அங்கு நடைபெற்ற தப்பாட்டக் கலைஞர்களின் ஆட்டத்தை ரசித்தார். அப்போது, இயக்குநர் பாலா, தவில் கலைஞர் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சசிகுமார்
படத்தின் நாயகன் சசிகுமார் கூறுகையில், சேது படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தபோது இதே பகுதியில் பணியாற்றி, அவரிடம் பட இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன். இப்போது அவரது படத்திலேயே நடிப்பதில் மகிழ்ச்சி. இதுவரை நடித்த படங்களைவிட இது வித்தியாசமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் படங்களை இயக்கவுள்ளேன் என்றார் அவர்.
வரலட்சுமி
படத்தின் நாயகி வரலட்சுமி கூறுகையில், "இது என்னோட நான்காவது படம். முதல் முறையாகக் கிராமத்துப் பெண்ணாக நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இது நடனம் குறித்த படம். இதுவரை மேற்கத்திய நடனம்தான் ஆடினேன். இதில், கரக்காட்டக் கலைஞராக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் வரலட்சுமி.