Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சித்தார்த்துக்கும் எனக்கும் காதலோ, கத்தரிக்காயோ இல்லை: தீபா சன்னதி
பெங்களூர்: சித்தார்த்துக்கும், தனக்கும் இடையே காதல் கிடையாது என்றும், சித்தார்த்-சமந்தா பிரிய தான் காரணம் இல்லை என்றும் நடிகை தீபா சன்னதி தெரிவித்துள்ளார்.
சித்தார்த், சமந்தா காதல் முறிய நடிகை தீபா சன்னதியும் ஒரு காரணம் என்று செய்திகள் வெளியாகின. தீபா சித்தார்த்துடன் சேர்ந்து எனக்குள் ஒருவன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் இந்த செய்திகள் வெளியாகின.
இது குறித்து தீபா கூறுகையில்,
நான் பெங்களூரில் வசித்து வருவதால் இந்த செய்தி பற்றி சில நாட்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதெல்லாம் யாரோ இந்த செய்தியை பரபரப்பாக்க கற்பனையை சேர்த்து கூறியது. படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் சித்தார்த்தை தொடர்பு கொண்டதே இல்லை. எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லை.
படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தான் நாங்கள் சந்தித்தோம். இது என் முதல் தமிழ் படம் என்பதால் அவர் எனக்கு உதவினார். அவ்வளவு தான். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முன்பு எல்லாம் வதந்திகளை கேட்டு காயம் அடைந்தேன். ஆனால் தற்போது பழகிவிட்டது என்று கூறி சிரித்தார்.
முன்னதாக தீபாவின் பெயர் ஆர்யாவுடன் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.