Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'தெறி'க்க விட்ட ரசிகர்கள்..முன்பதிவில் சாதனை படைத்த விஜய்
சென்னை: இன்று காலை ஆரம்பித்த தெறி படத்திற்கான முன்பதிவு சிலமணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.
விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா என்று நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி.
அட்லீ இயக்கத்தில் தாணு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.
இந்நிலையில் டிக்கெட் முன்பதிவிலும் இப்படம் புதிய சாதனை படைத்திருக்கிறது. தெறிக்கான சென்னை முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
தொடங்கிய சிலமணி நேரங்களிலேயே இப்படத்திற்கான சென்னை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் சார்பில் 104 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. தெறியின் சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோக உரிமையை எஸ்.பி.ஐ சினிமாஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் முன்பதிவிலும் இப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
சென்னை தவிர மற்ற பகுதிகளுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.