Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பாத்தீங்களா.. நான் சொன்னது உண்மைதான்னு நிரூபிக்கிறீங்க!' - எதிர்ப்பாளர்களுக்கு ஆமிர்கான் நச் பதில்!
இந்தியாவில் மதச் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக தான் சொன்னதை எதிர்ப்பாளர்கள் நிரூபித்துவிட்டனர் என்று நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த ராம்நாத் கோயங்கா நினைவு விருது வழங்கும் விழாவில் பேசிய ஆமிர்கான், "என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களைச் சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்துப் பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது," என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்புகளும் ஆதரவும் தொடர்கின்றன.
ஆமிர்கானுடன் பணியாற்றிய பல முக்கிய கலைஞர்கள் கூட அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இணையத்தில் பலரும் ஆமிர்கானை கடுமையாகச் சாடி வருகின்றனர். அவர் உடனே நாட்டை விட்டுப் போக வேண்டும் என்றெல்லாம் எழுதியும், மீம்ஸ்கள் போட்டும் வருகின்றனர்.
இவற்றையெல்லாம் பார்த்து ஆமிர்கான் இன்று இப்படிக் கூறியுள்ளார்:
"மதச் சகிப்பின்மை குறித்து நான் சொன்ன அத்தனை வார்த்தைகளுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் இப்போது என்னை எதிர்த்து சத்தம் போடும் அத்தனை பேரும், நான் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபித்துவிட்டனர்".
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!