Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
சீச்சீ ஒரே ஆபாசம்: நதியாவின் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு
சென்னை: நதியா நடித்துள்ள திரைக்கு வராத கதை படத்திற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் துளசிதாஸ் இயக்கியுள்ள படம் திரைக்கு வராத கதை. இந்த படத்தில் பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர். ஒரு ஆண் கூட கிடையாது. நதியா, இனியா, ஆர்த்தி, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர்.
பெண்ணும் பெண்ணும் சேரும் லெஸ்பியன் உறவு குறித்து படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு விடுதியில் தங்கி நர்ஸ் வேலை செய்யும் இரு பெண்களிடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.
திருமணம் செய்ய அவர்கள் பிரச்சனைகளை சந்திக்கும்போது ஒரு கொலை நடக்கிறது. கொலையை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரியான நதியா. லெஸ்பியன் என்பதால் இரு பெண்கள் நெருக்கமாக உள்ள காட்சிகள் உள்ளன.
தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சான்றிதழுக்காக சென்சார் போர்டுக்கு சென்றது. படத்தை பார்த்தவர்கள் பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் தர மறுத்தனர்.
பின்னர் அந்த நெருக்கமான காட்சிகளில் சிலவற்றுக்கு கத்தரிபோட்டுவிட்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். நெருக்கமான காட்சிகளில் ஆபாசம் தலைதூக்கியிருப்பதாகக் கூறி இந்த சான்றிதழாம்.