Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருநாளை திரளாக வந்து ரசிக்கிறார்கள் மக்கள்!- இயக்குநர் ராம்நாத்
திருநாள் படத்தை மக்கள் திரளாக வந்து ரசிக்கிறார்கள். கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று இயக்குநர் ராம்நாத் கூறியுள்ளார்.
ராம்நாத் இயக்கத்தில் நயன்தாரா, ஜீவா, ஜோ மல்லூரி உள்ளிட்டோர் நடித்த படம் திருநாள்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. கபாலி வெளியாகி ஒரு வாரத்தில் வந்தாலும், உலகெங்கும் 600 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது.
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் ராம்நாத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "திருநாள் படத்துக்கு முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நயன்தாரா - ஜீவாவின் பாத்திரங்களை மக்கள் அந்த அளவு ரசிக்கிறார்கள். நானே நேரில் போய் பார்த்த பல அரங்குகளில் படத்துக்கு நல்ல கூட்டம்.
தமிழகத்தின் உள்ளார்ந்த மாவட்டங்களில், குறிப்பாக கதை நிகழும் திருச்சி - தஞ்சைப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 'திருநாள்' அதன் பெயருக்கேற்ற கூட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்த்த பலர், பல காட்சிகளில் தங்களைப் பார்த்ததாக என்னிடம் கூறினார்கள். அதுதான் இந்தப் படத்துக்கான வெற்றியாகப் பார்க்கிறேன். எதிர்மறை விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களும் பாராட்டும்படி என் அடுத்த படைப்பைத் தருவேன்," என்றார்.