Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியைச் சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
ரஜினிகாந்த் அரசியலில் நேரடியாக இல்லை என்றாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரைச் சுற்றி அரசியல் நடந்து வருகிறது.
தமிழக அரசியலில் உள்ள மிகப் பெரிய குழப்ப சூழலில், இப்போதாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினிகாந்தை தங்களது கட்சியின் பக்கம் இழுக்க தொடர்ந்து தேசிய கட்சிகள் முயன்று வருகின்றன. அவரோ எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். குறிப்பாக ரஜினியை தமிழக பாஜகவுக்குள் இழுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.
சில தினங்களுக்கு முன் ஆர்கே நகர் தேர்தல் பாஜக வேட்பாளரான கங்கை அமரன் மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்தவர், ரஜினி விரைவில் அரசியல் முடிவு எடுப்பார் என்கிற ரீதியில் பேசிவிட்டுப் போக, உடனே ரஜினி தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக இல்லை என்று அறிவித்தார்.
இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். திருநாவுக்கரசர் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக பின்னர் தகவல் வெளியானது.