Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வெண்ணிலா பக்கத்தில் என்னை புதைச்சிடுங்க ப்ளீஸ்: நந்தினி கணவரின் கடைசி ஆசை
சென்னை: வெண்ணிலா பக்கத்தில் தன்னை புதைக்க வேண்டும் என்று நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
கடிதங்கள்
கார்த்திக் இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். ஒரு கடிதத்தில் தான் தற்கொலை செய்ய நந்தினியின் தந்தை ராஜேந்திரனே காரணம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அக்கா
கார்த்திக் தன் அக்கா ரம்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரம்யா அம்மாவ கூப்பிட்டு போய் வைச்சிக்கோ. நீ அம்மாவ பார்த்துக்கோ என தெரிவித்துள்ளார்.
முடியல
என்னால இதுக்கு மேலே வாழ முடியவில்லை. எனக்கு வாழவும் தெம்பு இல்லை. இத்தனை நாள் பிணமாக தான் வாழ்ந்தேன்.இனிமேல் நான் இருப்பது சரியில்லை. என்னால் வாழ முடியவில்லை. இனிமேல் நான் இருப்பது வேஸ்ட். என் கௌரவம், மரியாதை போச்சு. அம்மாவ பார்த்துக்கோ என கார்த்திக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி ஆசை
என் இறுதி ஆசை. வெண்ணிலாவை புதைத்த இடத்தில் பக்கத்தில் என்னையும் புதைக்க வேண்டும். வெண்ணிலா பக்கத்தில் என்னை புதையுங்கள் ப்ளீஸ் என கார்த்திக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.