twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "தூங்காவனம்" இரவுநேரக் கதையல்ல மனந்திறக்கும் ராஜேஷ் செல்வா

    By Manjula
    |

    சென்னை: தூங்காவனம் இரவு நேரத்தில் நடக்கும் கதையல்ல என்று படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

    கமல் ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோரின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தூங்காவனம்.

    Thoonga Vanam Story is not Based on Nightlife - Says Rajesh Selva

    பாபநாசம் திரைப்படத்திற்கு பின்பு கமலின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தூங்காவனம் படத்தைப் பற்றி மனந்திறந்து பேசியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா.

    தூங்காவனம் இரவுநேரத்தில் நடைபெறும் கதையல்ல, மேலும் நிறையப்பேர் இதனை ஒரு மென்காதல் கதை என்று எண்ணுகிறார்கள். படத்தின் தலைப்பை பார்த்து எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம்.

    தூங்காவனம் முழுக்க முழுக்க ஒரு ஆக்க்ஷன் திரைப்படமாகும். சிலர் இதனை இரவில் நடைபெறும் கதை என்று எண்ணுகிறார்கள், நானே ஒருசில பதிவுகளை ஊடகங்களில் பார்த்திருக்கிறேன்.

    தூங்காவனம் ஒருநாள் அதிகாலையில் ஆரம்பித்து மறுநாள் முடிவில் நடைபெறும் ஒரு கதை" என்று படத்தைப் பற்றி கூறியிருக்கிறார் ராஜேஷ் செல்வா.

    மேலும் "நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும், கமல் சாரை என் கடவுளாகக் கருதுகிறேன். அவர் என்னை இயக்குநர் என்று அழைத்த தருணத்தை என்னால் என்றும் மறக்கவே முடியாது" என்று நெகிழ்ந்து போயிருக்கிறார் ராஜேஷ் செல்வா.

    "தூங்காவனம்" திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    "One Should not Deceived by the Poetic Title Thoonga Vanam, This is an Action - Thriller. i have Seen few posts claiming that this story based on nightlife.actually the story opens up dawn of a day and ends the next day morning" Reveals Rajesh Selva.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X