Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
2.ஓ படப்பிடிப்பில் ரஜினி... பார்க்கக் குவிந்த மக்கள்!
சென்னை: நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு '2.O' படப்பிடிப்புக்கு வந்த ரஜினிகாந்தைப் பார்க்க ரசிகர்களும் பொதுமக்களும் குவிந்தனர்.
ரஜினிகாந்த் நடித்து ஏற்கனவே வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் '2.O' என்ற பெயரில் தயாராகி வருகிறது.
2.ஓ
ரூ 350 கோடி செலவில், ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இறுதிக் கட்டப் படப்பிடிப்பு
சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது பூரணமாக குணமடைந்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து ‘2.0' படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பை ஷங்கர் மீண்டும் தொடங்கி உள்ளார்.
திருக்கழுக்குன்றத்தில்
திருக்கழுக்குன்றத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் திருக்கழுக்குன்றம் சென்றார். அவர் வரும் தகவல் அறிந்ததும் ரசிகர்களும் பொதுமக்களும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டார்கள். ரஜினி காரில் இருந்து இறங்கியதும் அவரை சூழ்ந்து கொண்டு கைகுலுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர்.
படப்பிடிப்பு
போலீஸார் பாதுகாப்புடன் ரஜினிகாந்தை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுப்பி வைத்தனர். பின்னர் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியும் கதாநாயகி எமிஜாக்சனுடன் ஆடிப்பாடுவது போன்ற டூயட் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டன.
கடும் பாதுகாப்பு
படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிடுவதை தடுக்க படப்பிடிப்பு நடந்த பகுதியை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை கொண்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அடையாள அட்டை வைத்துள்ள படக்குழுவினர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
திருக்கழுக்குன்றத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.