Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கபாலி... குமுதவள்ளி... மீனா...
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் காய்ச்சல் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு பரவியுள்ள நிலையில் இந்த படம் ரஜினியை மட்டுமே குறிவைத்து புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் ரஜினியின் பெயர் கபாலீஸ்வரன் என்றும், ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தேவின் பெயர் குமுதவள்ளி என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியை தவிர மூன்று பவர்புல் பெண் கேரக்டர்கள் இருப்பதாகவும், அவர்களுடைய அதிகபட்ச உழைப்பு, ரசிகர்களை நிச்சயம் திருப்தி செய்யும் என்றும் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மூன்று பெண்கள்
கபாலி படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் ரித்விகா ஆகியோர்களின் கேரக்டர்கள் நிச்சயம் படம் வெளிவந்த பின்னர் பேசப்படும் என்று ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குமுதவள்ளி
கபாலீஸ்வரனாக ரஜினி நடிக்க, ரஜினியின் மனைவியாக குமுதவள்ளி கேரக்டரில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனதை மயக்கும் மாயநதி
தனது கதாபாத்திரம் பற்றி பேசிய குமுதவள்ளி, இளமையான குமுதவள்ளியை விட வயதான குமுதவள்ளிதான் தனக்கு பிடித்தமானது என்று கூறியுள்ளார். "மாயநதி இன்று... மார்பில் வழியுதே... தூய நரையிலும்... காதல் மலருதே.." இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை இயக்குநர் ரஞ்சித் சொன்ன போது உணர்ந்து நடித்தேன் என்று கூறியுள்ளார்.
ரித்விகா
மீனா என்ற முக்கிய கேரக்டரில் ரித்விகா நடித்துள்ளதாகவும் இந்த கேரக்டரின் முக்கியத்துவம் குறித்து ரஞ்சித் இதுவரை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளதாகவும் படம் வெளிவந்த பின்னர் இந்த கேரக்டரின் முக்கியத்துவம் அனைவருக்கும் புரியவரும் என்றும் கூறப்படுகிறது.
எளிமையான ரஜினி
ரித்விகாவின் கபாலி அனுபவம் சுவாரஸ்யமாக இருந்துள்ளது. ரஜினியின் எளிமை பற்றி கூறும் ரித்விகா, சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் நடிக்கும் போது படபடப்பாக இருந்ததாக கூறும் ரித்விகா, இயல்பாக பேசி தனது டென்சனை குறைத்தார் ரஜினி என்கிறார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்
நல்லவனுக்கு நல்லவன், மன்னன், படையப்பா ஆகிய படங்களில் ரஜினிக்கு சமமாக நாயகிகளின் கேரக்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் 'கபாலி' படத்திலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்று கூறியுள்ளார் இயக்குநர் ரஞ்சித்.