Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உரிய இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட வேண்டும்: வைரமுத்து வேண்டுகோள்
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதைகள் புத்தகத்தின் 12ம் பதிப்பு அறிமுக விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
தமிழ்ச் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையேற்ற இந்த நிகழ்ச்சியில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறுகதைகளை ஆய்வு செய்து பேசினார்.
கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றி பேசிகையில், திருவள்ளுவர் ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானவர் அல்லர். அவர் ஒட்டுமொத்த மனித குலத்துக்கே உரிமையானவர். இந்தியாவின் அறிவு வளம் என்பது திருவள்ளுவரையும் சேர்த்தால்தான் பூரணமாகும். எனவே உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் அரசுகள் திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ ஆவன செய்ய வேண்டும் என்றார்.
கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பாஜக எம்பி தருண் விஜய் முயன்றபோது, திருவள்ளுவர் சிலையை அங்கு நிறுவக் கூடாது என்று சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.