Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
வருண் மணியனுடன் திருமணமா? - த்ரிஷா விளக்கம்
எனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்.. ஆனால் எப்போது, யாருடன் என்பதை நான்தான் சொல்வேன் என்று வழக்கமான பதிலையே மீண்டும் கூறியுள்ளார் த்ரிஷா.
அதே நேரம் மாப்பிள்ளை வருண் மணியனா என்பதற்கு நேரடியாக அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.
நடிகை திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் ஜனவரியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின.
வருண்மணியன் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தை தயாரித்து உள்ளார். தற்போது சித்தார்த் நடிக்கும் ‘‘காவியத் தலைவன்'' படத்தில் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
விளக்கம்
வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் ஆனதாக வந்த செய்சி, படங்கள் குறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "இல்லை எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. திடீர் என்று நிச்சயதார்த்தம் செய்து கொள்ள மாட்டேன். நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நிச்சயம் எல்லோருக்கும் சொல்வேன்
நிச்சயதார்த்தம் என்று ஒன்று நடந்தால் அதுபற்றி என்னுடன் நடிக்கும் நடிகர்கள் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் போன்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பு எனக்கு இருக்கிறது. ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நிச்சயதார்த்தம் என்பது சந்தோஷமான நிகழ்ச்சி. அதை மறைக்க தேவை இல்லை," என்றார்.
அப்ப என்னதான் நடந்துச்சி?
இருவரும் நெருக்கமாக படமெடுத்துக் கொண்டது பற்றி கேட்டதற்கு, "வருண் மணியனை எனக்கு நன்றாக தெரியும். அவர் எனது நண்பர். ஆனால் திருமணம் பற்றியெல்லாம் இப்போது எதுவும் சொல்ல முடியாது. வருண் மணியனுக்கு குடும்பம் இருக்கிறது. எனவே மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. உங்கள் நண்பருடன் சேர்ந்து படம் எடுப்பதால் அவருடன் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று எடுத்துக் கொள்ள முடியாது," என்று மழுப்பினார்.
ராணாவை நான் காதலித்தேனா?
ராணாவுடன் ஏற்பட்ட காதல் முறிவு பற்றி கேட்டதற்கு, " ராணாவை காதலிப்பதாக எப்போதுமே நான் சொன்னது இல்லை. அப்புறம் எப்படி பிரிந்து விட்டேன் என்று சொல்லப்படுவதற்கு நான் பதில் கூற முடியும்?," என்றார்.
சரி, முடிவா என்னதான் சொல்றீங்க?
"நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். ஒருத்தரை பார்த்ததும் அவரை மணந்து கொள்ளும்படி இதயமும் மனமும் சொல்ல வேண்டும். அப்படி இரண்டும் சொல்வதாக உணரும் போது திருமணம் செய்து கொள்வேன்," என்று முடித்தார் த்ரிஷா.