Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துபாயில் கோலாகலமாக வெளியான உத்தம வில்லன்... ரசிகர்களோடு படம் பார்த்த கமல்
துபாய்: கமல் ஹாஸன் நடித்த உத்தமவில்லன் வியாழக்கிழமை மாலை துபாயில் திரையிடப்பட்டது.
கமல் ஹாஸன், பூஜா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள உத்தம வில்லன் படம் தமிழகத்தில் இன்று ரிலீஸாகியுள்ளது. முன்னதாக வியாழக்கிழமை மாலை துபாயில் உத்தம வில்லன் திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியிடப்பட்டது.
துபாய் கோல்டன் சினிமாஸில் நடந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் கலந்து கொண்டார். இதனால் ரசிகர்கள் திரைப்படத்தைக் காண மிகவும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
புர் துபாயில் உள்ள கோல்டன் சினிமாஸில் 1, 500 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். கமல் ஹாஸன் வருகையால் நேற்று கோல்டன் சினிமாஸ் களைகட்டியிருந்தது. கோல்டன் சினிமாஸ் மூடப்பட உள்ளது. அந்த தியேட்டரில் வெளியாகியுள்ள கடைசி படம் உத்தம வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா திரையரங்கில் படம் பார்த்த மதுரையைச் சேர்ந்த டிசைனர் சீனி பாவா கூறுகையில், படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கமல் குடுமியுடன் தோன்றுவது காமெடியாக இருந்தது. படம் போரடிக்காமல் குடும்பத்துடன் காணும் வகையில் அமைந்திருந்தது என்றார்.
துபாயில் படம் பார்த்த பொறியாளர் ஜுபைர் கூறுகையில், கமலின் நடிப்பு அவரது நடிப்புத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. கமல் தனக்கு வந்துள்ள நோய் குறித்து குடும்பத்தினருக்கும், குறிப்பாக மகனுக்கு தெரிவிக்கும் விதம் வித்தியாசமானது. எந்த நோய் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் பணியாற்ற வேண்டும் என்பதனை கமலின் நடிப்பு உணர்த்தியது என்றார்.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!