Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரச்சினையை தெளிவுபடுத்திட்டீங்க.. நன்றி டிஆர்!- உதயநிதி
வாலு பட விவகாரத்தில் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தியதற்காக டி ராஜேந்தருக்கு நன்றி என உதயநிதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வாலு படம் ஆகஸ்ட் 14 அன்று வெளிவருவது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டி. ராஜேந்தர். அப்போது அவரிடம் வாலு - உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "நான் யாரையும் குற்றம் சொல்லமாட்டேன். அதிகப் படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்குத்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படும். அதனால் தான் அந்தப் படத்துக்கு (வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க) அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளன. அவர்களைக் குறை சொல்ல மாட்டேன். ரிலீஸ் தேதியே தெரியாத எங்க படத்துக்கு எப்படி அதிக தியேட்டர் ஒதுக்குவாங்க... இருந்தாலும் எங்களுக்காக சிலர் காத்திருந்து தியேட்டர் தந்திருக்காங்க. அவர்களுக்கு நன்றி," என்றார்.
இதற்கு நன்றி தெரிவித்து உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர், "நான் எப்போதும் டி.ஆர் சாரை மதிப்பேன். பிரச்னையைத் தெளிவுபடுத்தியதற்காக நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.