Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாலு... ட்விட்டரில் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டுக் கொண்ட சிம்பு - உதயநிதி
சென்னை: வாலு படத்தின் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் தீர்ந்த நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர், அனேகமாக படம் ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாலு படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்து என்னை கீழிறக்க முயற்சிக்கின்றனர். ஆனால் என்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, எனக்கும் கடவுளிற்கும் நீங்கள் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக யாரையோ சாடியிருந்தார்.
Some people r still trying to stop the release and put me down .But u can never stop the love people have for me and god will answer u back
— STR (@iam_str) August 8, 2015
மேலும் வாழு வாழ விடு என்று ஒரு தத்துவத்தையும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உதிர்த்திருந்தார்.
I'm not against any stars or stars fans! But remember 1 basic thing! Just use ur brain (if u have one) b4 commenting on other ppl! #nonsense
— Udhay (@Udhaystalin) August 9, 2015
என்ன காரணம் என்று விசாரித்ததில் ஆகஸ்ட் 14 ம் தேதி வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படம் வெளியாகிறது, இந்தப் படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வாங்கி வெளியிடுகிறார்.
இந்தப் படத்திற்காக அதிகமான திரையரங்குகளை உதயநிதி புக் செய்து வைத்திருக்கிறார், எனவே வாலு படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. வாலு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத விவகாரத்தில் சிம்பு ரசிகர்களும் உதயநிதி ரசிகர்களும் காரசாரமாக நேற்று ட்விட்டரில் மோதிக் கொண்டனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் " ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் எல்லாப் பிரச்சினைகளும் கடவுள் அருளால் தீர்ந்து விட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால் நான் கண்டிப்பாக உங்களிடம் கூறுவேன் எனவே அமைதியாக இருங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
சிம்புவின் வாலு படவிவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக நான் எந்த நடிகருக்கோ அல்லது நடிகர்களின் ரசிகர்களுக்கோ எதிரானவன் அல்ல, ஒரு அடிப்படை உண்மையை மறந்து விடாதீர்கள். அடுத்தவர்களைக் குறை சொல்லுவதற்கு முன்பு மூளையை உபயோகப் படுத்துங்கள் (அப்படி ஒன்று இருந்தால்) என்று கடுமையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.
இதனால் சிம்பு மற்றும் உதயநிதி இருவரின் ரசிகர்களும் மிக வன்முறையாக ட்விட்டரில் வார்த்தை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.