Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இங்கிதம் இல்லாதவர்களுடன் பணியாற்ற முடியாது: சமுத்திரக்கனி படத்தில் இருந்து வெளியேறிய வரலட்சுமி
சென்னை: இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்று கூறி ஆகாச மிட்டாயீ படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
சமுத்திரக்கனி இயக்கி, நடித்த அப்பா படத்தை மலையாளத்தில் ஜெயராமை வைத்து ஆகாச மிட்டாயீ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்தனர்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிப்பதை நினைத்து வரலட்சுமி மகிழ்ச்சியாக இருந்தார்.
ஜெயராம்
நான் ஜெயராம் சாரின் தீவிர ரசிகை. அவருடன் சேர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமி தெரிவித்திருந்தார்.
வரலட்சுமி
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயராமுடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த வரலட்சுமி அந்த படத்தில் இருந்து திடீர் என விலகியுள்ளார்.
|
தயாரிப்பாளர்கள்
ஆகாச மிட்டாயீ படத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை வரலட்சுமி தெரிவித்துள்ளார். இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது. என் முடிவை ஆதரித்ததற்கு சமுத்திரக்கனி சார் மற்றும் ஜெயராம் சாருக்கு நன்றி என்று ட்வீட்டியுள்ளார் வரு.
பெண்கள்
பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி சேவ் சக்தி என்ற இயக்கத்தை துவங்கியுள்ளார். இந்நிலையில் அவர் ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்கள் பற்றி துணிச்சலாக ட்வீட்டியுள்ளார்.