Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... "லக்கா மாட்டிகிச்சு" ... ரிலீஸ்!
சென்னை: ஆர்யா - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் இடம்பெற்ற லக்கா மாட்டிகிச்சு பாடல் இன்று வெளியானது.
5 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் ராஜேஷ், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் மீண்டும் இணைந்திருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
RT if you love the lyrics of #LuckaMaattikkichi from #VSOP in @immancomposer's music! http://t.co/gJTeuD4WVy pic.twitter.com/k8sf5Hr9Me
— Sony Music South (@SonyMusicSouth) July 22, 2015
இந்த சூழ்நிலையில் இன்று இமானின் இசையில் படத்தில் இடம்பெற்ற லக்கா மாட்டிகிச்சு பாடல் வெளியாகி உள்ளது, சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பெண்களைத் திட்டி வரும் பாடல்களுக்கு மத்தியில் பெண்களைப் பாராட்டி இந்த பாடல் வரிகள் அமைந்து இருக்கின்றன, கானா ஜெகன் செந்தில் தாஸ் மற்றும் பழனியம்மாள் என்ற 3 பாடகர்கள் இந்தப் பாடலின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி உள்ளனர்.
இந்தப் பாடல் நன்றாக இருப்பதாக பாடலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.